பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி பதவியை ராஜினாமா செய்த 17 பேரில் ஒருவர் ஆவார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான இவர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்–்கு அளித்த பேட்டி:
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் சித்தராமையாவைக் காட்டிலும், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் பலம் ஓங்கியிருந்தது. டி.கே.சிவக்குமார் எப்படியாவது கூட்டணி ஆட்சியை 5 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பாளராக இருந்து வந்தார். எனவே அனைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்ெகாண்டார். இதனால் டி.கே.சிவக்குமார் மீது காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் மரியாதை அதிகரித்தது.