கோவை: கோவையில் ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கோவை கணியூரில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராய்மோன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ராய்மோன் இளம் பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி இளம் பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.