மக்களைவயில் நேற்று திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:சென்னை ஐஐடி மாணவி பாத்திமா, மரணம் தொடர்பான விசாரணையில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கையில், பாத்திமா குற்றஞ்சாட்டிய பேராசிரியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பாத்திமாவின் பெற்றோர், ஐஐடி.யில் அவரது அறைக்கு சென்றபோது அது சுத்தம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதாவது ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாத்திமா தூக்குப் போட்டுக் கொள்ள பயன்படுத்திய கயிறு கூட அந்த அறையில் இல்லை.