ராஜஸ்தான் சாலை விபத்தில் 10 பேர் பரிதாப சாவு

பிகனேர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து நேற்று காலை பிகானேர் புறப்பட்ட பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துங்கர்கர்க் பகுதியை கடக்கும்போது அதிவேகமாக எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பிகானேரில் உள்ள பிபிஎம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பனி மூட்டத்தினால் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

Related Stories: