சென்னை: தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும், என்று மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, திமுக எம்பி டி.ஆர்.பாலு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாம்பரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே துறையினர் அமைத்துள்ள சுரங்கப்பாதை, என்.எச்.45 நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் முடிவு பெறுவதால், சாலையை கடக்கவும், மேற்கு தாம்பரம் செல்வதற்கும் பயனற்றதாக இருக்கிறது என்று தாம்பரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.