சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறி நடிகை காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு விசிக பெண் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். இந்து கோயில்களில் உள்ள சிலைகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு எதிராக நடிகையும் பாஜ ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் கடந்த 2 நாட்களாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். தனது பேச்சுக்கு திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்ததை, ‘நடிப்பு பத்தல’ என விமர்சித்திருந்தார். இதற்காக தனக்கு வந்த மிரட்டல் அழைப்புகளை காயத்ரி ரகுராம் நேரலை செய்தார். மேலும் வரும் நவம்பர் 27ம் தேதி காலை 10 மணி அளவில் மெரினாவில் சந்திக்கிறேன்.