சென்னை: பொதுத் தேர்தலில் பின்பற்றப்படும் சட்ட நடைமுறையை உள்ளாட்சித் தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்று திமுக வழக்கறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர, அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட மாநகர அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் வரவேற்றார். தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, சட்டதிட்ட திருத்தக்குழுச் செயலாளர் பி.வில்சன், எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றினார்.