தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம் அருகே காமராஜபுரம், சோட்டப்பணிக்கன்தேரிவிளை, ஆண்டிவிளை, சித்தன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். கடந்த பருவ மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உப்பளங்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில் உப்பள பாத்திகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை மோட்டார் மூலம் ஓரிரு தொழிலாளர்கள் மட்டுமே அகற்றி வருகின்றனர். இருப்பினும் பாத்திகளுக்குள் புகுந்த வெள்ளம் இதுவுரை வற்றவில்லை. ராமநாதபுரம், வேதாரண்யம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என நான்கு மாவட்டத்திலும் இருந்து வேலை பார்த்து வந்த இத்தொழிலாளர்கள் கடந்த 100 நாட்களாக வேலையின்றி தங்கள் ஊர்களில் முடங்கியுள்ளனர்.