திருவனந்தபுரம்: கொச்சி மரடில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் ஜனவரி 11, 12 தேதிகளில் இடிக்கப்படுகிறது.கேரள மாநிலம் கொச்சி மரடில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டிய 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் இங்கு வசித்த 350க்கு மேற்பட்ட குடும்பத்தினர் காலி செய்து சென்றனர்.இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கேரள தலைமை செயலாளர் டோம் ஜோஸ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பை எப்படி இடிப்பது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.