சென்னை: புற்றுநோயை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பெட்-சிடி ஸ்கேன் கருவி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.மேலும், திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய கட்டிடம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறுவை அரங்கம், சிதம்பரம், காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறுவை அரங்கங்கள், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய கட்டிடங்கள், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுக் கட்டிடம் மற்றும் கடலூர், தர்மபுரி, திருநெல்வேலி, தேனி, திருச்சி, விழுப்புரம் மாவட்டம் என மொத்தம் ரூ.30 கோடியே 49 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.