தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் ராஜ ராஜ சோழன் சதய விழா கோலாகலமாக நேற்று துவங்கியது. 2ம் நாளான இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊர்வலமாக வந்து ராஜ ராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1034வது ஆண்டு சதயவிழா நேற்று துவங்கியது. முதலில் டிகேஎஸ்.பத்மநாபன் குழுவினரின் இசைநிகழ்ச்சி, களிமேடு அப்பர் குழுவினரின் திருமுறை அரங்க நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் நடந்த நிகழ்ச்சிக்கு சதய விழாக்குழு தலைவர் துரை.திருஞானம் வரவேற்றார். தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசினார்.தஞ்சை பெரிய கோயிலில் ராஜ ராஜ சோழன் சதயவிழா கோலாகலம்: மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட நிர்வாகம் மரியாதை
- ராஜ ராஜ சோழன் சத்தியவாசி கோலகலம்
- ராஜா
- மாவட்ட நிர்வாகம்
- தஞ்சய் பெரிய கோயில்
- ராஜராஜ சோழர்
- சத்ய விழா
- The Great Temple