மதுரை: தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து மதுரையில் நேற்று சிறப்பு விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டது. முகாமிற்கு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ பங்கேற்றனர். முகாமில் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ‘‘தமிழகத்தில் 4,391 இடங்கள் பேரிடர் பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் துவங்கியுள்ள பேரிடர் மீட்பு முகாம், தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது’’ என்றார்.