மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பையடுத்து ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து தொடர்ந்து 3 நாட்களாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை அது 9,500 கனஅடியாக சற்று குறைந்தது. இருப்பினும், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,500 கனஅடியானது.