ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் கூட்டணியில் இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது. டியூக் என்ற திறந்தமேனி வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகள் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவிட்டன. இதனால், டியூக் வரிசையில் 125, 200, 250, 390 ஆகிய மாடல்களை விற்பனை செய்து வந்தது. டியூக் வரிசையில் மிக சக்தி வாய்ந்த இரட்டை சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலாக 790 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம் இப்புதிய டியூக் பைக்கை இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் களமிறக்கியது. ₹8.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இப்புதிய பைக் மாடல் வந்துள்ளது. அறிமுகம் செய்த, முதல் 10 நாளில் மட்டும் 41 பைக் விற்பனையானது. இது, கேடிஎம் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.அடுத்த ஆண்டு ஏப்ரலில் மேலும் 30 நகரங்களில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கும். இதன் பேரலல் ட்வின் சிலிண்டர் கொண்ட 799 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.