டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு வரிப்பணத்தில் அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுகின்றனர்

திருவாரூர்: திருவாரூரில் அமமுக  துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி:  தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அரசின் வரிப்பணத்தில் வெளிநாடு சென்று ஊர் சுற்றி வருகின்றனர். இதனால் தமிழக மக்களுக்கு எந்த ஒரு பலனும்  ஏற்படபோவதில்லை. மேலும் சிறுவன் சுஜித் இறந்த சம்பவம் போன்று, வரும் காலங்களில் மேலும் ஒரு சம்பவம் நடைபெறாமல் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும்.  தமிழக அரசு, டாக்டர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு தினகரன் கூறினார்.

Related Stories: