கோவை: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கோவையை சேர்ந்த 2 வாலிபர்களிடம் சென்னை என்ஐஏ அலுவலகத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சிலரின் வீடுகளில் சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது. இவர்களுடன் தொடர்புள்ளதாக கடந்த ஜூனில் கோவையை சேர்ந்த முகமதுஅசாரூதீன்(32), ஷேக்இதயத்துல்லா(38), அபுபக்கர்(29), சதாம்உசேன் (26), இப்ராகிம் என்கிற ஜாகின்ஷா(26) ஆகிய 5 பேரை என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்தநிலையில் கொச்சியை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த அஷ்ரப் அலி மகன் சமீர் (22), உக்கடம் அண்ணாநகர் முதல் வீதியை சேர்ந்த எஸ்.கே.ஜான் மகன் சவுரூதீன் (30) ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 லேப்டாப், 2 செல்போன், 2 மெமரி கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் கோவை வாலிபர்களிடம் விசாரணை
- விசாரணை
- அலுவலகம்
- கோயம்புத்தூர்
- உடன் வேலை செய்பவர்களை
- தீவிரவாத அமைப்புகள்
- அலுவலக விசாரணை
- சென்னை என்.ஐ.ஏ.