புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்து ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், உடனடியாக அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன்கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.