திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவிற்கு லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடந்த 24ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை விசாரணை நடத்தினர். தொடர்ந்து அன்று நடந்த பத்திர பதிவுகள் எவ்வளவு, அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு என ஒப்பிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது கணக்கில் வராத 1,67,000 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சார்பதிவாளர் ஆனந்தராஜனிடம் மட்டும் 1,07,000 பறிமுதல் செய்யப்பட்டது.