ரேபரேலி: உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2017 ஆண்டுக்கான குற்றங்கள் தொடர்பாக ேதசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் 3.5 லட்சம் குற்றங்கள் ெபண்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளதாகவும், இதில் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரசேத்தில் 56,011 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதில் நாட்டில் முதலிடத்தை உத்தர பிரதேசம் பிடித்துள்ளது. இது வெட்கக்கேடானது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.