மணிலா: பிலிப்பைன்சில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். தலைநகர் மணிலாவில் உள்ள மிரியம் கல்லூரியில் மகாத்மா காந்தியின் உருவ சிலையை ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மகாத்மாவின் உருவசிலை அமைக்கப்பட்டுள்ளது.