புதுடெல்லி: ‘பொருளாதார குழப்பத்திற்கான தீர்வை, காங்கிரசின் மக்களவை தேர்தல் அறிக்கையிலிருந்து பிரதமரும், நிதி அமைச்சரும் திருடிக் கொள்ள வேண்டும்,’ என டிவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களின் பொதுமக்களின் வாங்கும் திறன் அதிகளவில் இருப்பது வழக்கம். ஆனால், இது தலைகீழாக மாறி, செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், கடந்த 7 ஆண்டில் முதல் முறையாக நகர்ப்புற மக்களின் வாங்கும் திறன் மிக குறைந்த சதவீதத்தை எட்டியிருப்பதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.