பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே புள்ளி மானை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் திருமந்துறை அருகே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான மான்கள் உள்ளன. அங்கு சிலர் நாயை கொண்டு மானை வேட்டையாடி வருவதாக பெரம்பலூர் சரக்கு வன அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் அறிவுறுத்தலின் பேரில் வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையில் சம்பந்தப்பட்ட வனப்பகுதிக்குள் வனப்பாதுகாவலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் 5 வயதுடைய அழகிய ஆண் புள்ளி மானை நாய்களை வைத்து துரத்தி பிடித்து, அவற்றின் தலையை துண்டித்து விட்டு உடலை மட்டும் ஆட்டோவில் கொண்டு செல்வதை பார்த்துள்ளனர். இந்நிலையில் அவர்களை விரட்டி மடக்கிய போது 4 பேர் தப்பியோடினர்.