திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே தொழில் உறுதி திட்டத்தை சேர்ந்த தொழிலாளிகள் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது ஒரு தொழிலாளியின் கழுத்தில் மலைப்பம்பு சுற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே நெய்யாறு அணை உள்ளது. இந்த பகுதியில் கேரள கூட்டுறவு மேலாண்மை கல்லூரி உள்ளது. இது வனப்பகுதியாகும். கல்லூரியை ஒட்டி புதர்கள் வளர்ந்து காணப்பட்டது. இதை அகற்றும் பணியில் நேற்று தொழில் உறுதி திட்டத்தை சேர்ந்த 55 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு புதருக்குள் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவருமாக மலைப்பாம்பை பிடிக்க முடிவு செய்தனர்.