48வது ஆண்டு தொடக்கவிழா தொண்டர்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக திகழும் : ஓபிஎஸ், இபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுக 48வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: அதிமுக 48வது ஆண்டு தொடக்க விழா அக்டோபர் 17 உலகத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாதநாள். 48வது ஆண்டிலே அடியெடுத்து வைக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற உழைத்திடுவோம். விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து நிலைகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மக்களுக்கு தொண்டாற்ற நமது பணிகளை உடனடியாகத் தொடங்குவோம். அதிமுக தொண்டர்களின் உழைப்பு ஒருபோதும் வீண் போகாத வண்ணம் தொண்டர்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக திகழும்.

Related Stories: