கொல்கத்தா: ‘`மேற்கு வங்கத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை எதிர்கொள்ள திறமையானவர்களை தேர்வு செய்வதற்கான குழு விரைவில் அமைக்கப்படும்,’ என்று இம்மாநில பாஜ தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜ கைப்பற்றியது. இது ஆளும் திரிணாமுல் பெற்றதை விட 4 தொகுதிகள் மட்டுமே குறைவு. அதிலும், கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜ 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதுடன் ஒப்பிடுகையில், பாஜ அங்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் 2021ம் ஆண்டில் இம்மாநிலத்தில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், தற்போதே பாஜ அங்கு மும்முரமாக களம் இறங்கி உள்ளது.