பெங்களூரு: கர்நாடக மாநிலம் கனகபுராவில் உள்ள ஒரு கிராமத்தில் 7 தலை கொண்ட பாம்பின் தோல் காணப்பட்டுள்ளது. கனகபுராவில் உள்ள மரிகவுடனா டோடி என்ற கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு கோயிலின் அருகில் 7 தலை கொண்ட பாம்பின் தோலை கிராமத்தினர் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் புராண கதைகளில் உள்ள பாம்பு உண்மையில் இருக்கக்கூடும் என்று நம்புகின்றனர்.இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது: இதே போன்ற தோல் சுமார் 6 மாதத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாம்புவின் தோல் கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் சிறப்பு அம்சம் இருப்பதாக நினைத்து இங்கு ஒரு கோயில் கட்டியுள்ளோம்.