திருச்சி: கொள்ைள கும்பல் தலைவன் முருகன், திருச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி திட்டம் வகுத்தது தெரியவந்துள்ளது. வீட்டு உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருச்சி பிரபல நகைக்கடை கொள்ளையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. தனிப்படை போலீசார் விசாரணையில், திருச்சி திருவெறும்பூர் அருகே நறுங்குழல் நாயகிநகர் பகுதியில் முருகன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று முருகனின் வீட்டை சோதனையிட்டனர். ஆனால், முருகன் அங்கிருந்து கடந்த 1ம் தேதி வாடகை கொடுத்துவிட்டு சென்று உள்ளார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ஷேக்அப்துல்காதரை தனிப்படை போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முருகன் தங்கியிருந்த வீட்டுக்கு போலீசார் பூட்டு போட்டனர்.