உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருவானைக்கோவில் கிராமத்தில் அரசினர் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, அக்கிராமத்தை சோந்த சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி அருகே, செயல்பாட 3 கட்டிடங்கள் உள்ளன. இவைகள் பள்ளிக்கு சொந்தமானவை. இந்த 3 கட்டிடங்களையும் முறையாக பராமரிக்காததாலும் பள்ளியின் பயன்பாட்டில் இல்லாததாலும் கட்டிடங்களை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சுகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் வகுப்பறைக்குள்ளே விஷப்பூச்சுகள் தஞ்சம் அடைகின்றனர்.