புதுெடல்லி: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிசுக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கில், அவர் விசாரணையை எதிர் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் சேர்த்து தாக்கல் ெசய்யும் பிரமாண பத்திரத்தில் தங்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் மற்றும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். ஆனால், மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் பாஜ முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன் மீதான இரண்டு கிரிமினல் வழக்குகள் உள்ள தகவலை மறைத்து விட்டதாக புகார் எழுந்தது. பட்நவிசுக்கு எதிராக கடந்த 1996 மற்றும் 1998ம் ஆண்டுகளில் இரண்டு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், இந்த வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்குகள் குறித்த விவரங்களை பட்நவிஸ் தமது பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை என தெரிகிறது.