மணிப்பூர் முதல்வர் வீடு அருகே பயங்கர தீ விபத்து

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தலைமை செயலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடம் முதல்வர் பிரேன் சிங்கின் அதிகாரப்பூர்வ பங்களாவில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்ததாகவும், தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தீ விபத்தைத் தொடர்ந்து முதல்வர் இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

The post மணிப்பூர் முதல்வர் வீடு அருகே பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: