கேரளாவில் திடீர் நில அதிர்வு


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் நேற்று காலை பல்வேறு இடங்களில் திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. காலை 8.15 மணியளவில் திருச்சூர் மாவட்டத்திலுள்ள குன்னம்குளம், எருமப்பட்டி, பழஞ்சி ஆகிய இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. பல வீடுகளில் பாத்திரங்கள் உருண்டதாகவும், வீடுகள் குலுங்கியதாகவும் அப்பகுதியினர் கூறினர்.

இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். 4 வினாடிகள் மட்டுமே இந்த நில அதிர்வு காணப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகியுள்ளது. இதே சமயத்தில் பாலக்காடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் இருந்து முழக்கம் கேட்டதாக அப்பகுதியினர் கூறினர்.

The post கேரளாவில் திடீர் நில அதிர்வு appeared first on Dinakaran.

Related Stories: