சூலூர்: கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நேற்று விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதை, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பார்த்து வியந்தனர். இந்திய விமானப்படையின் 87ம் ஆண்டுவிழா வரும் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விமானப்படை சார்பில் இந்தியா முழுவதும் உள்ள விமானப்படை தளங்களில் விமான கண்காட்சி மற்றும் விமானப்படையில் பயன்படுத்தும் பாராசூட், துப்பாக்கி மற்றும் ஏவுகணைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு போபாலில் விமான சாகச நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சி நடந்தது. இதைத்தொடர்ந்து, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமானங்களின் கண்காட்சியும்,