கள்ள துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு : 6 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லிகுந்தம்-கூனாண்டியூர் சாலையில் உள்ள நரியனூர் பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெடிக்காரனூரை சேர்ந்த அய்யமுத்து என்பரிடம்  ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி இருந்ததும் தெரியவந்தது. விசாரணையில், மேச்சேரி அருகே உள்ள கீரைக்காரனூரை சேர்ந்த காசி(65) என்பவரிடம் துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்தார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் காசியை பிடித்து விசாரித்தனர். தர்மபுரி மாவட்டம், தொப்பையாறு பகுதியில் உள்ள மூலக்காட்டை சேர்ந்த காசி, மூலக்காட்டில் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருப்பதாகவும், இங்கு துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்ததாகவும் கூறினார். இதையடுத்து தனிப்படை போலீசார் கள்ளதுப்பாக்கி தொழிற்சாலைக்கு சென்றனர். அங்கு கள்ள துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும்  பொருட்களை பறிமுதல் செய்தனர். இவரிடம் இருந்து  துப்பாக்கி வாங்கிய, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  4 நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், துப்பாக்கிகள் நக்சலைட்டுகளுக்கு விற்கப்பட்டதா? என்று போலீசார் விசாரிகின்றனர்.

Related Stories: