மும்பை: மும்பையை தலைமையிடமாக கொண்டு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரை அடுத்து ரிசர்வ் வங்கி பி.எம்.சி. வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளையும் 6 மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுப்பிய நோட்டீசில் கடந்த திங்கட்கிழமை முதல் 6 மாதத்துக்கு வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ₹1,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், அதில் கணக்கு வைத்துள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.