சென்னை: முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவனந்தபுரம் சென்று சந்தித்து பேசுகிறார். தமிழகம்-கேரளா இடையே முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட பிரச்னைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வரை இன்று நேரில் சந்திக்க உள்ளார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் செல்கிறார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தையில் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உள்ளனர். பரம்பிகுளம் - ஆழியாறு திட்டம், ஆனைமலை - பாண்டியாறு - புன்னம்புழா இணைப்பு திட்டம் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வருடன் எடப்பாடி இன்று சந்திப்பு : திருவனந்தபுரத்தில் மாலை 3 மணிக்கு கூட்டம்
- எடப்பாடி
- முதல் அமைச்சர்
- கேரளா
- நதி நீர் விநியோக கூட்டம்
- Parambikkulam
- முல்லைப்
- திருவனந்தபுரம் எடப்பாடி