பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று பாஜ.வின் சார்பில் மக்கள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: பாகிஸ்தான் ஏற்கனவே நம்பிக்கையை இழந்து விட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வந்த அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், இந்திய எல்லைக்குள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். அது மிகவும் நல்ல அறிவுரை தான். ஏனென்றால், அந்த தவறை அவர்கள் மீண்டும் செய்து இந்திய எல்லைக்குள் அத்துமீறினால், பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல மாட்டார்கள். கடந்த 1967, 1971ம் ஆண்டு செய்த தவறுகளை பாகிஸ்தான் மீண்டும் செய்து விடக்கூடாது.