சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: உயர்புகழ் நிறுவனங்களாக அறிவிக்கப்பட உள்ள 10 அரசு கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மத்தியப் பல்கலைக்கழகங்கள் என்பதால் அவற்றுக்கான செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். ஆனால்,அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவைப்படும் 1750 கோடியை தமிழக அரசு வழங்குவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு. அதேநேரத்தில் 1750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் செலவிடுவதற்கான உத்தரவாதத்தை தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் அளிக்காவிட்டால் இந்த தகுதி மராட்டியத்திலுள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம் அல்லது அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றி வழங்கப்படும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.