புதுடெல்லி: ‘எல்ஐசி.யின் பணத்தை, நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களில் அரசு முதலீடு செய்கிறது,’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து தனது கருத்துகளையும், விமர்சனங்களையும் நாள்தோறும் டிவிட்டரில் தெரிவித்து வருகின்றார். நேற்று அவர், எல்ஐசி.யின் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்படுவது குறித்து மத்திய அரசை கண்டித்துள்ளார். எல்ஐசி நிறுவனம் கடந்த இரண்டரை மாதங்களில் ரூ.57 ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக வெளியாகி உள்ள ஊடக செய்தியை, பிரியங்கா காந்தி நேற்று தனது டிவிட்டரில் இணைத்து பதிவிட்டுள்ளார். இதில் அவர், ‘இந்தியாவில் எல்ஐசி என்பது நம்பிக்கையின் மறுபெயராக உள்ளது.