வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை கொண்டு அழித்ததால் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக தகவல் தெழில்நுட்பப் பிரிவு செயலாளரான ஞான பிரகாசம் தலைமையில் 22 பேர் கொண்ட குழு திடீரென குடியாத்தம் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, அங்குள்ள பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை அழித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாட்டில் ஒரே நாடு ஒரே மொழி என்று மத்திய அரசு வகுத்த கொள்கைக்கு எதிராகவும், மத்திய அரசு நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் இந்தி மொழியில் தேர்வுகள் நடத்தப்படுவதற்கும் பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.