போடிமெட்டு மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்து 3 பேர் பலி

போடி: தேனி மாவட்டம்,  போடி அருகே பண்ணைத்தோப்பு, தீர்த்தத்தொட்டி, துரைராஜபுரம் காலனி, மீனா விலக்கு போன்ற பகுதிகளிலிருந்து டிரைவர் உள்பட 23 பேர் கேரள மாநிலத்தில் உள்ள ஏலத்தோட்ட வேலைக்கு நேற்று சென்றனர். மாலை பணி முடிந்து அதே ஜீப்பில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பியல்ராமை சேர்ந்த ஜீப் டிரைவர் முருகேஸ்வரன் (25), கங்காணி கண்ணன் உள்பட 23 பேரை ஏற்றிக்கொண்டு போடிமெட்டு மலைச்சாலையில் வந்து கொண்டிருந்தார். 8வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது பாரம் தாங்காமல் ஜீப், மலைச்சாலையில் கவிழ்ந்தது. இதில்2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

Related Stories: