திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிசேரியனில் பிறந்த குழந்தைக்கு கன்னத்தில் 2 தையல் போட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், ஆலங்காயம் அடுத்த பெத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன், மெக்கானிக். இவரது மனைவி தணிகைஅரசி(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தணிகைஅரசி மீண்டும் கர்ப்பமானார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. சிறிதுநேரத்தில் குழந்தையை டாக்டர்கள் இளவரசன் மற்றும் உறவினர்களிடம் காண்பித்தனர். அப்போது குழந்தையின் கன்னத்தில் இரண்டு தையல்கள் போடப்பட்டு இருந்தது.