ஹைட்ரபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைட்ரபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் எனும் பகுதியை சேர்ந்தவர் பி.என்.யுகாந்தர் , 80 வயதான இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியதோடு முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் மத்திய அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை கவனித்துள்ளார். இவரது மகன் சத்யா நாதுல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ - வாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பி.என்.யுகாந்தர் நேற்று அவரது இல்லத்தில் காலமானார்.