சென்னை: சென்னை பழைய ஜெயில் ரோட்டை சேர்ந்தவர் நந்தகோபால். தொழிலதிபரான இவர் கடந்த 6ம் தேதி இரவு நண்பர்களுடன் கோவளம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். தேனாம்பேட்டை அருகே வந்த போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள், காரை வழிமறிந்து நாங்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறி காரை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினர். காரில் சோதனை செய்த 2 பேரும் நந்தகோபாலை மிரட்டி, அவர் வைத்திருந்த விலையுயர்ந்த 2 செல்போன்கள், ₹13 ஆயிரம் பணத்தை பறித்துகொண்டு பைக்கில் தப்பிச்சென்றனர்.