புதுடெல்லி:முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ‘‘கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மோடி செய்த பணிகளுக்காகத்தான், அவர் கூடுதல் வாக்குகளுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். அவரது பணியை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது,’’ என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, ‘செயல்பாடுகளில் நல்லது, கெட்டது என எப்போதும் இருக்கும்.