ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களாக இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் உள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்கு, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரம்தான் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கு பிரதிபலனாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம், ஆலோசகர் நிறுவனமாக நியமிக்கப்பட்டு, அதற்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் பணம் வழங்கியுள்ளது. இந்த நிதி முறைகேடு தொடர்பாக இந்திராணி முகர்ஜி கடந்த 2017ம் ஆண்டு அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி சாட்சியம் அளித்தார். அவர் தனது சாட்சியத்தில், ‘ஐஎன்க்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு அனுமதி பெற, கடந்த 2008ம் ஆண்டு, அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள நார்த் பிளாக் அலுவலகத்தில் நானும், எனது கணவர் பீட்டர் முகர்ஜியாவும் சந்தித்து விண்ணப்பம் கொடுத்தோம்.