லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடிக்கு அடுத்த மாதம் 19ம் தேதி வரை காவலை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடில இங்கிலாந்து தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 19ம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். பின்னர், தென்மேற்கு லண்டனில் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு பலமுறை அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவை நிராகரிக்கப்பட்டன.