ரயில் தண்டவாளத்தில் பேராசிரியை சடலம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்   அருகே காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆஷா எல்.ஸ்டீபன்(37).  காட்டாக்கடையில் உள்ள தனியார் கல்லூரியில்  உடற்கல்வித்துறை தலைவராக  பணியாற்றி வந்தார். இவரது கணவர் ஷாஜி ஜான். விரணக்காவு பகுதியில் உள்ள ஒரு  சர்ச்சில் பாஸ்டராக உள்ளார். இந்த தம்பதிக்கு 2  பிள்ளைகள் உள்ளனர். இந்த  நிலையில் விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான மாணவர் ேசர்க்கை  நேற்று முன்தினம் கல்லூரியில் நடந்தது. இதில் ஆஷாவும் கலந்து கொண்டார். தொடர்ந்து மதியம்  சாப்பிட சென்றவர்  பின்னர் கல்லூரிக்கு வரவில்லை. இந்த நிலையில் அன்று மாலை இரும்பில் பகுதியில்  ரயில் மோதி இறந்த நிலையில் காணப்பட்டார்.

தகவல்  அறிந்த ரயில்வே போலீசார் ஆஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர். அவர்  தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை  கடக்கும்போது  எதிர்பராதவிதமாக ரயில் மோதி இறந்தாரா? என்பது தெரியவில்லை.  இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: