டெல்லி : முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்துக்கு 4-வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் இரண்டு மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் விசாரணைக்கு செல்லாததால் ப.சிதம்பரம் வீட்டிற்கு மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றுள்ளனர்.