புதுடெல்லி: பெண்ணையாற்றில் அணை கட்டுவது தொடர்பான வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதிலளிக்க 4 வாரம் அவகாசம் கேட்ட கர்நாடகா அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் கிளையான பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில்,”பங்காருபேட்டை பகுதியில் புதிய தடுப்பணையை கர்நாடக அரசு கட்டுவதை நீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும். அதேப்போல் பெண்ணையாற்று பகுதியில், தடுப்பணை உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செய்வதற்கு முன் தமிழக அரசின் ஒப்புதலை கண்டிப்பாக கர்நாடக அரசு பெற நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.இந்த நிலையில் பெண்ணையாறு தொடர்பாக விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த முறை வந்தபோது தமிழக அரசு தரப்பில் கூடுதலாக பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”பெண்ணையாற்றை பொருத்தவரையில் தமிழகத்தையும் அடிப்படையாக கொண்டு ஓடுவதால் அதற்கு கர்நாடகா அரசு உரிமைக்கோர முடியாது.