டெல்லி: டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஏர் இந்தியா விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு நேற்றிரவு 8.13 மணிக்குப் ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 59 பயணிகள் இருந்தனர். அப்போது விமானத்தில் லேண்டிங் கியர் பகுதியில் பழுது இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.